No comments yet

பங்குனித் திங்கள்

பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

பெண்கள் அன்று விரதமிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களைப் படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வர்.

Post a comment